உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அதிக அளவிலான ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுவரும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து தெரிவித்துள்ள உத்திரபிரதேச காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குனர் பிரசாந்த் குமார் அவர்கள் பேசுகையில், இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் அந்தந்த மத வழிபாட்டுத் தலங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…