உத்தரப்பிரதேசம்: ஒரே நாளில் 105 குழந்தைகளுக்கு டெங்கு..!

Default Image

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 105 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. உத்திரபிரதேசம் பிரசோபாத் மாவட்டத்தில் 40 சிறார்கள் உட்பட இதுவரை 50 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசோராபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 105 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வரை அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக தற்போது டெங்கு மிக அதிக அளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்