உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்து விட்டார் – தேவேந்திர ஃபட்னாவிஸ்

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அதிக அளவில் சத்தம் எழுப்புவதால், ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் மசூதிக்கு வெளியே ஒலிபெருக்கி வைத்து அனுமான் பாடல் இசைக்கப்படும் எனவும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து பேசிய மகாராஷ்டிர மாநிலத்தில் மூத்த பாஜக நிர்வாகி தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் உத்தவ் தாக்கரே ஒலிபெருக்கிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் ஒலிபெருக்கியில் அனுமான் பாடல் இசைக்கப்பட்ட போது அது கைப்பற்றப்பட்டு விட்டது. அப்படியானால் உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்துள்ளார் என்பது தான் அர்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்