இந்தியாவில் போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய கோவிஷீல்ட் தடுப்பூசியில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் 2 மில்லி லிட்டர் அதாவது நான்கு டோஸ் கொண்ட கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் 2 மில்லி லிட்டர் கொண்ட குப்பிகளை உற்பத்தி செய்வதில்லை எனவும் கூறியுள்ளது. இந்த போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மனித உயிருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி காலாவதி என குறிப்பிட்டுள்ள தடுப்பு மருந்துகள் போலியானது எனவும், போலி கோவிஷீல்ட் மருந்துகளை கண்டுபிடித்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் போலி மருந்துகள் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றாலும், சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…