PM at diaspora [Image-Twitter/@ani]
100 க்கும் மேற்பட்ட இந்தியாவின் தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பித் தரவுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால 100க்கும் மேற்பட்ட இந்திய தொல்பொருட்களை திருப்பித்தர முடிவு செய்துள்ள அமெரிக்க அரசாங்கத்தை பாராட்டுவதாக, பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் உரையாற்றும் போது தெரிவித்தார்.
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, நமது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கூறும் பல தொல்பொருட்கள் சர்வதேச சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன, இதனை திருப்பித்தர முடிவு செய்த அமெரிக்க அரசின் செயலால் தான் மகிழ்ந்ததாகக் கூறினார்.
அமெரிக்க அரசின் இந்த செயல் நம் இந்திய-அமெரிக்க உறவின் வலிமையைக்காட்டுகிறது. பிரதமர் மோடி 2014இல் பதவியேற்றதன் பின் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவிலிருந்து பறிபோன பல பழங்கால பொருட்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளார். மொத்தம் 251 பழம்பொருட்கள் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…