கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்நிலையில்,கொரோனாவிற்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். இது குறித்து திலிப் கோஷ் கூறுகையில், நான் பசுவை பற்றி பேசினால் பலருக்கு பிடிக்காது. பசு மதிப்பை கழுதைகள் ஒருபோதும் உணராது. இந்தியர்கள் பசுக்களை வணங்கி வருகிறோம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க கோமியத்தை அருந்த வேண்டும். மேலும், பசுவின் மதிப்பு மது அருந்துவோருக்கு எப்படி புரியும் என கூறுகிறார். திலிப் கோஷ் இதுபோல பேசுவது முதல் முறையல்ல, இதற்கு முன் கடந்த ஆண்டு பசுவின் பாலில் தங்கம் உள்ளது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திலிப் கோஷின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…