கொரோனா தொற்று பரவல் மத்தியில் நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்கியது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகள் இன்று முதல் நடைபெறும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஏற்கனவே அறிவித்து இருந்தது. 2021-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என்று தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவிய நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்கும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்கியுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுகள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தேர்வு நடைபெறுமா என தேர்வர்களுக்கு குழப்பம் இருந்த நிலையில், இன்று தேர்வு திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 2 மையங்களில் நடைபெறும் முதன்மை தேர்வில் 332 பேர் இன்று பங்கேற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் ஜன.7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…