மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலர் தங்கள் உயிரையும் துட்சமென மதித்து பொதுமக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.
அப்படி பணியாற்றும் ஊழியர்களை நாட்டில் சில இடங்களில் பொதுமக்கள் தாக்கும் அறியாமை அவல நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. சென்னையில் கூட, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், ஊழியர்களை தாக்க வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் எனவும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதல்களை இனி பொறுத்து கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…