தினமும் 40-50 குழந்தைகள் வரை மருத்துவமனையில் அனுமதி – கொல்கத்தா!

Published by
Rebekal

கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி  செய்யப்பட்டதாகவும், தற்போது இந்த குழந்தைகள் புதிதாக பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழந்தைகளுக்கு மலேரியா மற்றும் டெங்கு சோதனைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை போக்குவதற்காக புதிதாக வார்டு கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நோய் பரவலுக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago