உத்தர பிரதேச மாநில அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா!

Default Image

உத்தர பிரதேச மாநில உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், என பலருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், உத்தரபிரதேச மாநில அமைச்சர் சதிஷ் மாகானாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அவர் தற்பொழுது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்