சர்வாதிகார போக்கை உ.பி அரசு கைவிட வேண்டும் – ஹட்ராஸ் சம்பவத்துக்காக கண்டனம் தெரிவிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி!

Published by
Rebekal

சர்வாதிகார போக்கை உ.பி அரசு கைவிட வேண்டும் – ஹட்ராஸ் சம்பவத்துக்காக கண்டனம் தெரிவிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஹட்ராஸ் எனும் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து மத்திய அரசையும் உத்திரப்பிரதேச முதல்வரையும் கண்டித்து வரக்கூடிய நிலையில், தற்போது எதிர்க்கட்சியினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செல்லும் பொழுது உத்தரப்பிரதேச மாநிலத்தின் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்வதும் கண்டனத்தை வலுக்க செய்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அவர்கள், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீது போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வது நாடு முழுவதிலும் எரிச்சலை உண்டாக்குவதுடன், அரசு தனது தவறை சரிசெய்து அக்குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பது மிக கடினமாக மாறும் எனவும் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதில் மட்டுமே தற்போது அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அரசின் செயல்களால் ஜனநாயகத்தின் வேர் பாதிக்கப்படுவதாகவும்  மாநில அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago