3 நாள் துக்கம் அனுசரிப்பு.! அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள்.! முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

Default Image

மறைந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அவர்களின் இறுதி சடங்கு அரசு முறைப்படி நடைபெறும் எனவும், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனக்குவம் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பல்வேறு அரசியல் தலைவர்கள் முலாயம் சிங் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் செய்தியையும், மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும், 3 நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் முதல்வர் யோகி  ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்