உத்தரபிரதேசம் : நொய்டா சாலையில் நண்பருடைய பிறந்த நாளை இளைஞர்கள் கூட்டமாக அரை நிர்வாணத்துடன் ஆட்டம் போட்டு கொண்டாடிய நிலையில், போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சாலையில் நின்று கொண்டு சட்டையை கழட்டி கையில் மதுபாட்டிலுடன் ஆட்டம் போட்டு அந்த இளைஞர்கள் தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.
இரவு நேரம் என்று கூட பார்க்காமல் நடு சாலையில் தாங்கள் வந்த கார்களை நிறுத்திவிட்டு அதில் பாடல்களை போட்டு கொண்டு அதிகமாக சத்தம் எழுப்பினர். பொலிரோ காரின் மேற்கூரையில் இருந்து ஒருவர் மதுபானத்தை சாலையில் தெளித்துக்கொண்டு இருந்தார். கீழே போதையில் இருந்த நண்பர்கள் பாடல்களை போட்டு நடனமாடவும் செய்தனர்.
இது அப்பகுதியில் சென்று கொண்டு இருந்தவர்களை முகம் சுளிக்கும் வகையில் செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், பலரும் உடனடியாக இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைத்தளங்களின் மூலம் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுனில், சிந்தி, ரோஹித் சிங் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அத்துடன், அவர்கள் வந்த பொலிரோ கரை பதிவு எண் UP16 DJ6170 207 MV சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தனர்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…