உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் சென்றாண்டு ஒரு கும்பலால் பாலியல் பலகாரம் செய்யப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை ராய் பரோலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதற்காக சம்பவத்தன்று நீதிமன்றம் நோக்கி பாதிக்கப்பட்ட பெண் சென்று கொண்டிருக்கும் போது, கவுரா எனும் திருப்பத்தில் ஒரு கும்பல் வழிமறித்து அப்பெண்ணை கடுமையாக தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.
இக்கோர சம்பவத்தில் உடம்பில் 90 சதவீத தீக்காயங்களுடன் அப்பெண் சுமார் 1 கிமீ தூரம் ஓடி அருகில் இருந்த கிராமத்தில் உதவி கேட்டுள்ளார். அங்குள்ளவர்கள் போலீசிற்கு தகவல் கூறி போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அப்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹரி ஷங்கர், திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய் , ஷிவம் திரிவேதி, ஷுபம் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஷிவம் திரிபாதி , ஷுபம் திரிபாதி ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலில் இருந்தவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற…
எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா,…
சென்னை : இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து…
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த…