Unlock 3.0- இவைக்கெல்லாம் தடை, இவைக்கெல்லாம் அனுமதி.. முழுவிபரம் இதோ!

Default Image

3 ஆம் கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31-ம் தேதி வரை கடுமையாக இருந்தது.

அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்பொழுது 2-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்பொழுது 3-ம்  கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1 முதல் 3-ம் கட்ட தளர்வுகள் அமலில் வரும்.

இவைக்கெல்லம் அனுமதி:

  • யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் திறக்க அனுமதி.
  • சுதந்திர தினக் கொண்டாட்டம், தனிமனித இடைவெளியுடன் நடைபெற அனுமதி.
  • உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி.
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்.
  • நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவைக்கெல்லாம் தடை:

  • பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை செயல்படாது.
  • மதுபானக் கூடங்கள், மெட்ரோ ரயில், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.
  • திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை.
  • சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு.

போன்ற சில தளர்வுகளை அளித்து, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்