உலகிலுள்ள மிகவும் பெரிய தொடர்வண்டி வலை அமைப்புகளில் இந்திய இரயில்வே ஒன்றாகும்.அதுமட்டுமல்லாமல் இந்திய ரயில்வே நூற்றாண்டு விழா கண்ட சிறப்பு உடையது. இந்தியாவிலுள்ள மொத்த இரும்புப் பாதை நீளமானது 63,140 கிலோமிட்டர் ஆகும்
இது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாடில் இயக்கப்படுகிறது. இத்தைகைய நீண்ட தொடர் அமைப்பை பெற்ற இரயிலில் மட்டும் மக்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 500 கோடி பேர் பயணத்தில் ஈடுபடுகின்றனர்.இவர்களில் பெரும்பாலான மக்கள் சாமானியர்கள்..
அதே போல் இரயில்வே மூலமாக 35 கோடி டன்கள் சரக்கு போக்குவரத்திற்கும் உபயோகிக்கப்படுகிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றனது.இரயில்வேயில் மட்டும் 16 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இரயில் பயணம் என்ற ஒன்றை இந்தியாவில் 1853-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரத்திற்கு பின் 42 தொடர்வண்டி அமைப்புகள் மட்டுமே இருந்தது அதன்பின் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது.இதன்படி உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக இந்திய இரயில்வே உருவாகி உள்ளது.இதன்கீழ் தொலைதூர மற்றும் புறநகர் இரயில்கள் இரண்டுமே இயக்கப்பட்டு உள்ளது.
இந்திய இரயில்வே 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது.அதே போல இந்த ஒவ்வொரு மண்டலமும் அதனுள் பல கோட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒவ்வொரு கோட்டமும் அதற்கென்று ஒரு தலைமை இடத்தினை கொண்டு செயல்படுகிறது.அப்படி இந்திய இரயில்வே மொத்தம் 67 கோட்டங்களை தன்னுடன் கொண்டுள்ளது.
இவைகள் அனைத்தும் மத்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் நேரடி கட்டுபட்டில் இருந்து வரும் பொதுத்துறை நிறுவனம்.மிகப்பெரிய போக்குவரத்து சாதனமாக நடுத்தர மற்றும் நாட்டை தன் ரயில்வே கீழ் இணைத்து வரும் இந்த துறைக்கு முக்கிய அமைச்சர் ஒருவர் இருப்பார், அவரோடு இதற்கான 2 இணை அமைச்சர்கள் இருப்பர்.அதோடு மட்டுமில்லை இவர்களுக்கு கீழே 6 உறுப்பினர்கள் அவர்களுக்கு ஒரு தலைவர் என்று மிகப்பெரிய வலையமைப்பை கொண்டே இரயில்வே வாரியம் செயல்படுகிறது.
இரயிலே வாரியத்தின் கட்டுப்பாட்டில் 17 மண்டலங்களுக்கும்பொது மேலாளர்கள் இருப்பர் இவர்கள் மூலமாக இரயில்வே வாரியத்திற்கு தேவை மற்றும் பிற வசதிகளை நேரடியாக எடுத்துரைக்கின்றன. மண்டலம் பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இதனை கோட்ட மேலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சராக தற்போது பியூஸ் கோயல் இருந்து வருகிறார். இதன் தலைமையாகம் இந்திய தலைநகரத்தில் அமைந்துள்ளது.இந்திய இரயில்வே இந்திய போக்குவரத்து சாதனங்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
ஏனென்றால் சாமானியர்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக உள்ளது.அதனாலேயே இந்திய ரயில்வே பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…