“நிலக்கரி இருப்பு உள்ளது;மின்தடை வராது” – மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதி..!

Published by
Edison

மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பில் உள்ளதால் மின்தடை ஏற்படாது என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார்.

உலகளவில் நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால்,இந்தியாவில் டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் மின் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்து வருகின்றன.இதற்கிடையில், மின்நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.அதில்,மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல,பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,மின்சக்தி அமைச்சகம், பிஎஸ்இஎஸ் மற்றும் டாடா பவர் அதிகாரிகள் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை குறித்து இன்று டெல்லியில் உள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உடன் ஆலோசனை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து,ஆலோசனைக்கு பிறகு,செய்தியாளர்களை சந்தித்த மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது:நாட்டில் போதிய நிலக்கரி இருப்பு கையில் உள்ளது,மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பில் உள்ளதால் மின்சார தடை ஏற்படாது.

உண்மையில், எந்த நெருக்கடியும் இல்லை, இல்லை. இது தேவையில்லாமல் உருவாக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தக்கூடிய ஆதாரமற்ற எஸ்எம்எஸ் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாடா பவர் சிஇஓவை நான் எச்சரித்தேன். கெயில் மற்றும் டாடா பவரின் செய்திகள் பொறுப்பற்ற நடத்தையின் செயல்களாக உள்ளன.

ஏனெனில்,மின் நிலையங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான நிலக்கரி கிடைக்கிறது.மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறாக உள்ளது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன் ஆகும், இது 4 நாட்களுக்கு தேவையானது.

அதன் பிறகு,மின் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 1.7 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்.நான் நிலக்கரி மற்றும் சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியுடன் தொடர்பில் இருக்கிறேன்.மேலும்,நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களுக்கு தேவையான அளவு எரிவாயுவை தொடர்ந்து வழங்குமாறு நான் கெயில் சிஎம்டியிடம் கேட்டேன். விநியோகம் தொடரும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். கடந்த காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இல்லை, எதிர்காலத்தில் அது நடக்காது”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

5 minutes ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

1 hour ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

1 hour ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

2 hours ago

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

3 hours ago