விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் புகுந்தது.
லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் உத்தரபிரதேச துணை முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர்களுக்கும் கருப்புக் கொடி காட்டியதால் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு புகுந்த காரில் இருந்தவர்களை கீழே இறக்கி விட்டு காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், அருகில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு வந்து கோஷங்களை எழுப்பினர் என தெரிவித்தனர்.
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில்,…