ஹமாஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா.? நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்வி.! மத்திய அமைச்சர் பதில்!

Published by
பாலா கலியமூர்த்தி

இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். காசாவில் ஹமாஸ் தனியாக ஆட்சி அதிகாரம் செய்து வருகிறது. இதனால், ஆக்கிரமைப்பு தொடர்பாக பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான பிரச்சனை  நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய  தாக்குதலில் இருந்து, இருதரப்பு மக்களின் வாழ்க்கையே சிதைந்து விட்டது.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை  தொடங்கிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இதுவரை தொடர்ந்து வருகிறது.

அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 64 வது நாளான இன்றும் நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமில்லாமல், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியோர் என பலரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்வதாக இஸ்ரேல் குற்றசாட்டியுள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்பினரை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளை இஸ்ரேல் வற்புறுத்தி வருகிறது.

குஜராத்தில் போலி சுங்கச் சாவடி மூலம் கோடிக்கணக்கில் மோசடி… தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலுக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுமா என நாடாளுமன்ற மக்களவையில் கேரள எம்பி கேள்வி எழுப்பியிருந்தார். கேரள எம்பி சுதாகரனின் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி சார்பில் எழுத்துபூர்வாக பதில் அளித்ததாகவும், கடிதம் ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த கடிதத்தில், ஒரு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளதா என்பதை அந்தந்த துறை சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என பதில் கூறியிருந்தார். இதையடுத்து, மீனாட்சி லேகி சார்பில் வெளியானதாக கூறப்பட்ட அந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடை செய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என எக்ஸ் தளத்தில் ஒருவர் இணையமைச்சர் மீனாட்சி லெகியை டேக் செய்து கேட்டிருந்தார்.

இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்த மீனாட்சி லெகி, உங்களுக்கு தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ்  அமைப்பு குறித்த பதில் எனது ஒப்புதலின்றி வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பு குறித்த எந்த பதிலும் நான் கையெழுத்துயிடவில்லை. ஹமாஸ் அமைப்புக்கு தடை என எந்த ஒப்புதலும் நான் அளிக்கவில்லை என்றார்.

எனவே, நாடாளுமன்றத்தில் உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் இல்லாமல் எழுத்துப்பூர்வமான பதில் தரப்படுகின்றனவா? என கேள்வி எழுந்துள்ளது. ஹமாஸ் அமைப்பு குறித்து கேரளா எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பெயரில் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கப்பட்ட நிலையில், இந்த கேள்விக்கான எந்த கோப்பிலும் தான் கையொப்பமிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

 

மேலும், இந்த பிரச்சனை சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கிறோம் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

30 minutes ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

30 minutes ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

1 hour ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

1 hour ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

2 hours ago