மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க அமித்ஷா தயார் என மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ஒத்திவைப்பு, முடக்கம் எனும் செய்திகள் தான் வெளியாகி வருகின்றன .
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘ மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதிப்பார். அப்போது மணிப்பூர் போல, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கூறினார்.
அதே போல, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்ற வளாகத்தில் செய்டியாளர்களிடம் கூறுகையில், “மணிப்பூர் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவாதத்திற்கு தயார் என்று கூறியுள்ளார். மணிப்பூர் பிரச்சனையை முன்னெடுக்கும் எதிர்க்கட்சிகள் உண்மையை ஏன் விரும்பவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தான் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…