“யூடியூப் எனக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் தருகிறது”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!

Published by
Edison

யூடியூப் நிறுவனம் தனக்கு மாதம் ரூ .4 லட்சம் தருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி  டெல்லி-மும்பை புதிய விரைவு சாலையின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.

டெல்லி-மும்பை விரைவுச் சாலை, சுமார் ரூ.95,000 கோடி செலவில் கட்டப்பட்டு, மார்ச் 2023 க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பணிகள் ஏற்கனவே ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன,இந்த நிலையில்தான், கட்கரி லோஹ்தகி கிராமத்தில் நடந்து வரும் திட்டப் பணியின் நிலையை ஆய்வு செய்துள்ளார்.

delhi

இதனையடுத்து, ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா தொற்றுநோய்களின் போது தனது அனுபவங்களைப் பற்றி மனம் திறந்த அமைச்சர்,அந்த சமயத்தில் நேரத்தை அவர் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும்,இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “கொரோனா நேரத்தில், நான் இரண்டு விஷயங்களைச் செய்தேன்-நான் வீட்டில் சமைக்க ஆரம்பித்தேன், வீடியோ மூலம் விரிவுரைகளை வழங்கினேன்.

நான் ஆன்லைனில் பல விரிவுரைகளை வழங்கியது, யூடியூபில் பதிவேற்றப்பட்டன. பெரும் பார்வையாளர்கள் காரணமாக, யூடியூப் இப்போது எனக்கு மாதத்திற்கு ரூ .4 லட்சம் தருகிறது,” என்று அவர்  கூறினார்.

இதனைத் தொடர்ந்து,அவரது கடந்த காலச் சம்பவத்தை நினைவு கூர்ந்த அமைச்சர் தனது மனைவியிடம் சொல்லாமல் மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டதாக கூறினார்.மேலும்,இது குறித்து கூறுகையில்:

“நான் புதிதாக திருமணம் செய்துகொண்ட தருணத்தில், என் மனைவியிடம் சொல்லாமல், என் மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன்”,என்று கூறினார்.அதாவது,சாலை அமைப்பதற்காக அதை இடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் கட்கரி கூறினார்.

மேலும்,ஹரியானாவில் நெடுஞ்சாலையின் சுமார் 160 கிலோமீட்டர் பணிகள் மார்ச் 2022 க்குள் முடிவடையும் என்று கூறினார்.குறிப்பாக,டெல்லியில் இருந்து ராஜஸ்தானில் டௌசா மற்றும் வதோதராவிலிருந்து அன்கலேஷ்வர் வரையிலான சாலையின் ஒரு பகுதி மார்ச் 2022 க்குள் கட்டப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், குருகிராம் மக்களவை உறுப்பினர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago