வீராங்கனைகள் போராட்டம்.! பாஜக எம்பி மீதான பாலியல் புகார்.. அரசியல் வேண்டாம்.! மத்திய அமைச்சர் பேட்டி.!

Mansuk mandaviya

வீராங்கனைகள் போராட்டத்தை அரசியலாக மாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து, அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெல்லியில் போராடி வருகின்றனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணி, பதக்கங்களை கங்கை ஆற்றில் விடுவது என பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது நாடெங்கிலும் இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

சரண் சிங் மீது பாலியல் புகார் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவிய, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை கோரும் உரிமை உண்டு. மல்யுத்த வீரர்கள் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர், அது செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தன் வேலையை செய்யட்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் வேண்டாம் என மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்