Categories: இந்தியா

வங்கதேசத்தில் சிக்கியுள்ள 19,000 இந்தியர்கள்… மத்திய அமைச்சர் முக்கிய தகவல்.!

Published by
மணிகண்டன்

டெல்லி : வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் பின்னாளில் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கானோர்கள் உயிரிழக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. நாட்டின் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துள்ளார்.

இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா, பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம் குறித்தும், வங்கதேச கலவரம் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாநிலங்களவியில் விளக்கம் அளித்தார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “ வங்கதேச பாதுகாப்பு அமைப்பு தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளார். பின்னர் இந்தியாவுக்கு வருவதற்கு ஒப்புதல் கோரினார். ஒப்புதல் பெற்ற பின்னர் நேற்று மாலை டெல்லிக்கு வந்தார்.

எங்கள் தூதரக அதிகாரிகள் மூலம் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம். அங்கு 19,000 இந்தியர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் சுமார் 9000 பேர் மாணவர்கள். பெரும்பாலான மாணவர்கள் ஜூலையில் நாடு திரும்பி விட்டனர். அங்குள்ள சிறுபான்மையினர்கள் (இந்துக்கள்) நிலை குறித்தும் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.

அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல்வேறு குழுக்கள் கண்காணித்து வருகின்றன. வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக வேண்டும். இந்த சிக்கலான சூழ்நிலையின் எச்சரிக்கையாக இருக்குமாறு நமது எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், டாக்காவில் உள்ள அரசு அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். ஆகஸ்ட் 5 அன்று, ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் குறிப்பிட்டார்.

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

7 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

15 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago