அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஆட்டோவிற்கான நம்பர் 1 உற்பத்தி மையமாக மாறப்போகிறது” என்று கூறினார்.
ஏற்கனவே இது குறித்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் கூறுகையில்,அடுத்த ஆண்டு நிச்சயமாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான அறிக்கைகளின் படி,இந்தியாவுக்கு வரும் டெஸ்லாவின் முதல் மாடல் மிகவும் மலிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்பதிவு சில வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .உலகின் பிற பகுதிகளைப் போலவே டெஸ்லாவும் இந்தியாவின் விற்பனையை நேரடியாகக் கையாள உள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…