மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடனான கூட்டதிற்கு தாமதமாக வந்ததற்கு அமித் ஷா கண்டனம்…
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே 2 நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. மேலும் புயல் கரையைக் கடந்த போது 130 கி.மீ க்கு மேல் பலத்த சூராவழிக்காற்று வீசியது, மேலும் யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இதனால், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் லட்சக்கணக்கில் மக்களின் வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளது, மேலும் 1 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி 1000 கோடி நிவாரணப் பணிக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேற்குவங்கத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ததையடுத்து பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் 3:30 மணி கலைகுண்டாவில் திட்டமிடப்பட்டது.
அந்த சந்திப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார் முதல்வர் மம்தா, இந்த செயலைக் கண்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். அதில், மேற்கு வங்க முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் செய்தது சிறிய நடத்தை, அது “பொது நலனுக்கு மேலாக ஆணவத்தை” காட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் யாஸ் புயல் குடிமக்களை பெரிதும் பாதித்துள்ளது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது காலத்தின் தேவை” என்று ஷா ட்வீட் செய்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…