கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளின் கட்டமைப்புக்கு ரூ.1.1 லட்சம் கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல மாநிலங்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். இதனால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,”கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளின் கட்டமைப்புக்கு ரூ.1.1 லட்சம் கோடி வழங்கப்படும். அதன்படி,சுகாதாரத்துறை உள்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடியும்,இதர துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் வழங்கப்படும். மேலும்,மருத்துவமனைகளில் மருத்துவ உள்கட்டமைப்புக்கு ரூ.100 கோடி வழங்கப்படும்.
7.95 % வட்டியில் மூன்றாண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும்.பிற துறைகளுக்கான கடன் வட்டி விகிதம் 8.25 % ஆக இருக்கும்.
அவசர கால கடன் வசதியாக தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலம் வழங்கப்படும். “,என்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…