மக்களவையில் நேற்று முன்தினம் நாட்டின் பொருளாதாரம் பற்றிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி குறைந்து கடந்த 7 ஆண்டுகளாக மந்தநிலையில் இருப்பதாகவும் , வேலைவாய்ப்பு இல்லை எனவும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக ஆனந்த் சர்மா சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதில் தொழிற்சாலைகள் மூடியதால் நாட்டில் 2.5 கோடி தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளனர்.இதற்கு பாஜகவின் தவறான பொருளாதார கொள்கை என குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நேரங்களில் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் தான் கீழே சென்றுள்ளது தவிர மந்த நிலைக்கு தள்ளப் படவில்லை எனக் கூறினார்.
அப்போது மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு பின்னால் தூங்கிக்கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதற்கு நெட்டிசன்கள் பலர் பல கருத்துக்களை தெரிவித்து வந்தன. அதில் நிர்மலா சீதாராமன் பேச்சு சோர்வை ஏற்படுத்தியதால் எம்.பி தூங்குகிறார் போல எனவும் , நிர்மலா சீதாராமன் பேசியது என்னவென்றே புரியாமல் திடீரென கை தட்டுகிறார் என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் உங்களின் பின்புறம் எம்.பி ஒருவர் சுகமாக தூங்குகிறார் என கருத்துகளை தெரிவித்தனர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…