டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பால் இதுவரை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 653 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகு, டெல்லியில் 165, கேரளாவில் 57, தெலுங்கானாவில் 55, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 49 மற்றும் 46 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், வரும் ஆண்டில் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த வியாழன் அன்று பிரதமர் மோடி, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கூடுதல் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் போது, புதிய வகைகளை மனதில் வைத்து நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மேலும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும், கொரோனா விதிகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டில் கொரோனா பாதித்த பகுதிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து அங்கு பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…