ஜம்மு-காஷ்மீருக்கு அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி.!

Published by
murugan

ஜம்மு-காஷ்மீருக்கு அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜம்முகாஷ்மீர்  மாநிலத்திலிருந்து வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்முகாஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதில், ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதா 2020 ஐ அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, காஷ்மீரி, டோக்ரி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய  5 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், மசோதா குறித்த கூடுதல் விவரங்களை ஜவடேகர் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் பருவமழை அமர்வு செப்டம்பர் 14 முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

28 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

32 mins ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

32 mins ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

1 hour ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

2 hours ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

2 hours ago