ஹைதராபாத்தில் குடும்ப தகராறு காரணமாக 4 வயது சிறுவன் உறவினரால் கடத்தி, கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள மைலார்தேவ்பள்ளி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவனை அவரது உறவினர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுவன் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் சிறுவனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவன் நான்கு வயதேயானவர் என்பதால் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் பின்னதாக இந்திரா சொசைட்டி என்னும் பகுதியில் ஒரு சிறுவனின் சடலம் இருந்ததை கண்ட உள்ளூர்வாசிகள் போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது காணாமல் போயிருந்த சிறுவன் தான் சடலமாக இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக விசாரித்ததில் கொலைக்கு பின்னணியில் வீரேஸ் எனும் சிறுவனின் உறவினர் இருப்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது சகோதரி மகேஸ்வரி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது அவர்களுக்குள் சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீது இருந்த கோபத்தில் இருந்த சிறுவனை வீரேஸ் சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. தற்போது இதுதொடர்பாக வீரேஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…