UMANG செயலிக்கு குரல் கொடுக்க ஆள் தேவை – அரசாங்கத்தின் அழைப்பு!

Default Image

UMANG செயலிக்கு குரல் கொடுக்க ஆள் தேவை என அரசாங்கத்தால் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

பான், ஆதார், டிஜிலோகர், எரிவாயு முன்பதிவு, மொபைல் பில் செலுத்துதல், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற பல வகை பயன்பாடுகளை கொண்ட UMANG செயலி பல லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்க சேவைகளை மொபைலிலேயே வழங்க கூடிய இந்த செயலுக்கு குரல் கொடுக்க ஆள் தேவைப்படுகிறது.

எனவே இது குறித்த அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவமும் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் பல மொழிகளில் பொதுமக்களுடன் பேச வேண்டும், மேலும், பகுப்பாய்வு செய்து பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சில தகுதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்