உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனில் போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, கடுமையான போர் நிலவி வரும் நிலையில், உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.கார்கிவ், சுமியில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…