Categories: இந்தியா

உஜ்வாலா திட்ட சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த மாதம் ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது உஜ்வாலா திட்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.100 குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.703 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது மேலும் 100 ரூபாய் விலை குறைவு காரணமாக பொது மக்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.603க்கு கிடைக்கும். அதேநேரத்தில் வெளிச்சந்தையில் ரூ.903 க்கு விற்பனையாகிறது.

தேர்தல் நெருங்குவதால் சிலிண்டர் விலையை பாஜக குறைத்து வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. இதனிடையே, அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரவுள்ளதால், மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், குறிப்பாக விலை குறிப்பு, பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை பெறுவார். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா என 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக அரசு தேர்தல் வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகிறது. இந்த சூழலில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது.

இந்த கூட்டத்தில், உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தெலுங்கானாவில் பழங்குடியினருக்கு பல்கலைக்கழகம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி தெலுங்கானா சென்றிருந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago