ஆட்சி அமைத்து 100-வது நாளை முன்னிட்டு ராமரை வழிபட அயோத்தி வந்த உத்தவ் தாக்கரே..!

கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சிவசேனா கட்சி 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து முன்னிட்டு அயோத்தி சென்று இன்று ராமரை வழிபட இருப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இதனால் சிவசேனா தொண்டர்கள் அயோத்தி செல்ல சிறப்பு ரெயில் மூலம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து தானே வழியாக உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்.இந்த சிறப்பு ரெயில் நேற்று அயோத்தி வந்தடைந்தது.
இதே ரெயில் மீண்டும் இன்று இரவு 11.20 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டுநாளை அதிகாலை 5 மணிக்கு மும்பை வந்தடைகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025