கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவதற்காக இரண்டு திட்டங்களை ஆந்திர முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவதை நோக்கமாக கொண்டு திங்கட்கிழமை அன்று இரண்டு ஊட்டச்சத்து திட்டங்களை தொடங்கியுள்ளார். ‘YSR சம்பூர்ணா போஷனா மற்றும் YSR சம்பூர்ணா போஷனா பிளஸ் என்ற இரண்டு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர், ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள பிரிவினர்களுக்கு இந்த திட்டம் மூலம் சத்தான உணவு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 30.16 லட்சம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 52.9% கர்ப்பிணி பெண்கள் கடுமையான ரத்தச்சோகையாலும், 31.9% குழந்தைகள் குறைந்த பிறப்பு எடை கொண்டவர்களாகவும், 31.4% குழந்தைகள் குன்றிய வளர்ச்சியாலும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே வருங்கால சந்ததியினரை ஆரோக்கியமாக மாற்றவும், ஊட்டச்சத்து குறைபாடு இறப்புகளை குறைக்கவும் அரசு இந்த இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார். இதனை 8320 அங்கன்வாடி மையங்களை உள்ளடக்கிய 77 பழங்குடியினர் பகுதிகளில் சத்தான உணவை வழங்க YSR சம்பூர்ணா போஷனா பிளஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முயற்சியால் மாநில அரசு ஆண்டுக்கு ரூ. 1863 கோடி செலவிடுவதாகவும், அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு ரூ. 1100 செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் YSR சம்பூர்ணா போஷனா ஆப், பாக்கெட் புக் மற்றும் SOP புக்லெட்களையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…