கனமழையில் அடித்து செல்லப்பட்ட இருவர்-மகாராஷ்டிரா..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இருவர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். கனமழை காரணாமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கார் மாவட்டத்தில் பெய்த கனமழையில் இரண்டு பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழையால் சுவர் இடிந்து விழுந்து ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மட்டும் மழையின் சராசரி 89.27 மில்லி மீட்டராக இருந்து வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழு மகாராஷ்டிரா மாநிலத்தில் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.