கேரளா தங்கக்கடத்தல் விவகாரம்… முக்கிய குற்றவாளிகள் கைது… என்.ஐ.ஏ தகவல்…

Published by
Kaliraj

கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, என்.ஐ.ஏ.,தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நடைபெரும் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பைசல் பரீத், ராபின்ஸ் ஹமீது ஆகியோர், யு.ஏ.இ.,யில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, சர்வதேச காவல்துறையான, ‘இன்டர்போல்’ அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சந்தீப் நாயர் சார்பில், அலுவா நீதிமன்றத்தில், அவர்சார்பாக  ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘வழக்கு தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் தானாக முன்வந்து தெரிவிக்கத் தயாராக உள்ளேன்’ என, அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

37 minutes ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

1 hour ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

1 hour ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

2 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

3 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

3 hours ago