கொச்சியில் கிளைடர் விபத்து..இரண்டு கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு.!

Default Image

கொச்சியில் உள்ள தொப்பும்படி பாலம் அருகே கிளைடர் மோதியதில் இரண்டு கடற்படை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அவர்கள் ஐ.என்.எஸ் கருடாவிலிருந்து ஒரு வழக்கமான பயிற்சிப் பயணத்திற்கு புறப்பட்டபோது காலை 7 மணியளவில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு அதிகாரிகள் உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்த லெப்டினென்ட் ராஜீவ் ஜா மற்றும் பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு தெற்கு கடற்படை உத்தரவிட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்