84 வயது மூதாட்டிக்கு 30 நிமிட இடைவெளிகளில் செலுத்தப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி…!

Default Image

கேரளாவில் 84 வயது மூதாட்டிக்கு 30 நிமிட இடைவெளிகளில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக நாடு முழுவதிலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி இரண்டு டோஸாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளிலும் தவறுதலாக சரியான கால இடைவெளியின்றி  தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதேபோல தற்போது கேரளாவிலும் 84 வயது மூதாட்டி ஒருவருக்கு 30 நிமிட இடைவெளிகளில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த  மூதாட்டி தடுப்பூசி செலுத்த சென்றதாகவும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்  பாதுகாப்பிற்காக ஒரு மணிநேரம் மருத்துவமனையிலேயே உட்கார வைக்கப்பட்டு இருந்த மூதாட்டிக்கு, மீண்டும் அடுத்த டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதன் விளைவாக மூதாட்டிக்கு உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்