இந்தியாவை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தளர்வுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் அந்த மாநிலங்கள் முழு ஊரடங்கு பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி, மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதன்படி, இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் என்றும் போக்குவரத்து சேவை முடக்கப்படும் என கூறினார்.
இந்த வாரம் முழு ஊரடங்கு வியாழன் மற்றும் சனிக்கிழமை நடைமுறையில் இருக்கும் எனவும் அடுத்த வாரம், புதன்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறினார்.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…