உத்தரப்பிரதேசத்தின் பால்ராம்பூர் கிராமத்தில் இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நேற்று 22 வயது தலித் பெண் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு நான்கு மருத்துவர்கள் அடங்கிய பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
அந்த பெண்ணின் கை, கால்கள் எலும்பு முறிந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பிரேத பரிசோதனையில் இதுபோன்ற காயங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் அந்த தலித் பெண் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள கல்லூரியில் சேர்க்கைக்குச் சென்றுள்ளார். மாலை வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பின்னர், அந்த தலித் பெண் ஒரு ரிக்ஷாவில் நேற்று இரவு கையில் குளுக்கோஸ் ஊசி உடன் திரும்பி உள்ளார்.
அப்போது அவரின் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால், அவரை அருகிலுள்ள மருத்துவமனை அழைத்து சென்றனர். பின்னர், பால்ராம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கும் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் சகோதரர் அளித்த புகாரைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இறந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேசம் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு முதுகு தண்டுவடம் நொறுங்கி, நாக்கு வெட்டப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அந்த சிறுமி நேற்று முன்தினம் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…