உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இருவரை கைது செய்துள்ளனர்.
நொய்டாவில் பிஸ்ரக் பகுதியில் நேற்று இரவு காவலர்கள் வாகன சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
திடீரென காரில் உள்ள நபர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காரில் இருந்த இருவருக்கு காலில் குண்டடி பட்டது. உடனே போலீசார் அந்த காரை தடுத்து மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்த இருவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய அம்மாவட்டத்தின் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஆங்குர் அகர்வால், காரிலிருந்து துப்பாக்கி சூடு நடத்திய இருவரை கைது செய்துவிட்டோம். இந்நிலையில், காரிலிருந்து ஒருவர் தப்பி சென்றுவிட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதில் கைதான இவர்களின் பெயர் சிராஜ், ராமு. இவர்களிடம் உரிமம் இல்லாத 2 துப்பாக்கியும் சில தோட்டாக்களும் இருந்தது. அதை பறிமுதல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…