டுவிட்டர் இந்தியாவின் புதிய குறை தீர்க்கும் அதிகாரி நியமனம்..!

Published by
Edison

கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு முதன்மை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்,இந்த மூன்று அதிகாரிகளும் இந்தியாவில் வசிப்பவர்களிடம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,இந்திய பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்ப்பதற்கு,இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சாதுர் நியமிக்கப்பட்டார்.ஆனால்,அரசின் விதிப்படி,தர்மேந்திர சாதுர் அவர்களின் பெயர்,முகவரி உள்ளிட்டவை டுவிட்டர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில்,டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இதனையடுத்து,டுவிட்டர் இந்தியாவின் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர்  பதவி விலகினார்.

இதனையடுத்து,புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் தேவைப்படும் வகையில் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்கத் தவறியதால்,தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 79 (1) இன் கீழ்,சட்ட பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க நேரிடும் என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில்,டுவிட்டர் நிறுவனம் தற்போது இந்தியாவின் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமித்துள்ளது. அதன்படி,பயனர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ‘grievance-officer-in @ twitter.com’ இல் குறை தீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

 

Published by
Edison

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

2 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

4 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

5 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

5 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

6 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

7 hours ago