நீண்ட விவாதத்திற்குப் பிறகு புதிய விதிகளை ஏற்கும் ட்விட்டர் ..!

Published by
Edison

மத்திய அரசின் புதிய ஐ.டி விதிமுறைகளை ஏற்க தயார் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.

அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.

மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் கடந்த 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனங்கள்,மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக தெரிவித்தன.

ஆனால்,ட்விட்டர் நிறுவனம் இந்த புதிய விதிகளுக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.அதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இதனையடுத்து,மத்திய அரசின் விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும்.அவ்வாறு,செய்யவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில்,மத்திய அரசின் புதிய ஐ.டி விதிகளை ஏற்பதாகவும், இந்தியாவில் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி,இந்தியாவில் எழும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு,ட்விட்டர் சார்பில் இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும்,சர்ச்சைக்குள்ளான கருத்துகளை நீக்குதல்,புகார்களை கையாளுதல் போன்றவற்றிக்கான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால்,அதற்கான அதிகாரிகளை நியமிப்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் தற்போது பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

55 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago