ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்…!

Published by
Rebekal

போக்சோ சட்டத்திற்கு எதிராக இருந்ததால் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி இருந்தார். அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என சர்ச்சை எழுந்தது.

எனவே, இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் சட்டத்தை மீறி பெற்றோரின் புகைப்படத்தை பதிவு செய்ததன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராகுல்காந்தி இந்த பதிவை உடனடியாக நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவரும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் விமர்சனத்துக்கும், சர்ச்சைக்கும் உள்ளாகிய ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு தற்பொழுது ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago