கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரட்டையர்கள்…!

Published by
லீனா

கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரட்டையர்கள். 

கேரள மாநிலம், கடுவாக்குளம் அருகே இடுங்கடி புதுபரம்பில் அப்துல் சலாமின் மகன்களான நிசார் ஹான் மற்றும் நசீர் ஆகிய இரட்டையர்கள் தங்களது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது தாய் பாத்திமா தனது மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு, உள்ளூர் வாசிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து, உள்ளூர் வாசிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இரட்டையர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு வருடத்திற்கு முன்பாக இவர்களது வேலை பறிபோனது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் கோட்டயம் நகர கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பணம் செலுத்தப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பதாக வங்கியில் இருந்து கடனை திருப்பித் தருமாறு அவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அவர்கள் பாலக்காட்டில் உள்ள தங்கையின் சொத்தை விற்ற பின் கடனை திருப்பித் தருவதாக வங்கியில் இருவரும் பதிலளித்தனர். இருப்பினும் மன வேதனை தாங்க இயலாத நிலையில் சகோதரர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கின்றனர்.

Published by
லீனா

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

8 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

10 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

13 hours ago