காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்து நேற்று விமர்சித்திருந்த நிலையில், இன்று மத்திய அரசின் கொரோனா கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அனைத்து மக்களும் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வது இல்லை.
எனவே தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்து நேற்று விமர்சித்திருந்த நிலையில், இன்று மத்திய அரசின் கொரோனா கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக விமர்சித்துப் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கொரோனாவை கட்டுப்படுத்தும், முதல் நடவடிக்கை துக்ளக் லக்கடவுனை அமல்படுத்தியது. இரண்டாவது வழிமுறை மக்களை மணியடிக்க செய்தல், மூன்றாவது வழிமுறை கடவுளைத் துதித்துப் பாடுதல்’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…