மகாராஷ்டிரத்தின் மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் முன்னே சென்ற இரு கார்கள் மற்றும் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்த ஒரு காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் மற்றொரு காரில் இருந்த ஒருவர் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மற்ற காரில் இருந்தவர்கள் மற்றும் லாரியில் இருந்தவர்கள் என 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நவி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வரக்கூடிய ஒருவர் தனது குடும்பத்தினருடன் புனேவில் இருந்து நவி மும்பைக்கு செல்லும் பொழுது ஏற்பட்ட இந்த விபத்தில் அவரது குடும்பத்தினர் நான்கு பேரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மற்றொரு காரில் இருந்த தம்பதிகளில் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் மகன் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…