அசாமில் ஆட்டோ மீது ட்ரக் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டம் பைதல்கால் என்ற இடத்தில் அதிகாலை 5 மணியளவில் கரீம்கஞ்ச் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த ட்ரக் ஒன்று ஆட்டோ ரிக்ஷா மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ஒருவரைத் தவிர ஆட்டோவில் பயணம் செய்த அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், விபத்துக்கு காரணமான ட்ரக் ட்ரைவர் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில், விபத்தில் உயிரிழந்த 9 பேருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், ஆட்டோ மீது மோதி விட்டு தப்பி ஓடிய டிரைவரை கண்டுபிடிப்பதற்கு அசாம் போலீசார் முயற்சி செய்து வருவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…