போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் சார்பாக இயங்கிவரும் ஹன்சா சர்வீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம். இந்நிறுவனம் டிஆர்பி ரேட்டிங்கில் தவறு நடப்பதாக மும்பை சைபர் கிரைமில் புகார் கொடுக்க, விசாரணையைத் தொடங்கியது மும்பை போலீஸ் தற்பொழுது வரை ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த வினய் திரிபாதி தான் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் சில சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். திரிபாதியுடன் சேர்த்து விஷால் பண்டாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபாதி இந்த ஊழலை நிகழ்த்த பண்டாரி மூலமாக தான் பாரோமீட்டர்கள் நிறுவப்பட்ட வீடுகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸ் கூறினார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…